அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, March 24, 2017

கவி வாழ்க!

அழகைப்
பார்ப்பவன்  ரசிகனாகிறான் ;
அறிந்தவன் அன்பைத் தருகிறான்;
ஆராதிப்பவன் கவிஞனாகிறான்!

அவலத்தை
ஏற்பவன் கோழையாகிறான்;
எதிர்ப்பவன் புரட்சி செய்கிறான்;
உணர்பவன் கவிஞனாகிறான்!

உலகைப்
புரிந்தவன் வாழ்கிறான்;
புரியாதவன் சாகிறான்;
போற்றுபவன் கவிஞனாகிறான்!

மாற்றத்தை
ஏற்பவன் ஏற்றம் பெறுகிறான்;
மறுப்பவன் ஏமாளியாகிறான்
கடப்பவன் துறவியாகிறான்;
கையிலெடுப்பவன் கவிஞனாகிறான்!

கடவுளை
ஏற்பவன் ஆத்திகனாகிறான்;
எதிர்ப்பவன் நாத்திகனாகிறான்;
உணர்பவன் ஞானியாகிறான்;
படைப்பவன் கவிஞனாகிறான்!