நெடுவாசல்
***************
வாடிவாசல் பாரடா துள்ளும்காளை கானடா
நெடுவாசல் நானடா நேர்எனக்கு எவனடா?
கோடிகோடி வளமதைக் கொட்டித்தரும் வயலடா
நாடிவந்த தாரடா நாடுவிட்டு ஓடடா!
எரிவாயு தேடியா என்நிலத்தில் அலைகிறாய்
என்னைநீ பாரடா எரிவாயு நானடா!
ஊர்மாற்றி ஒருவேசம் பேர்மாற்றி ஒருவேசம்
என்றென்றும் பொருத்தமே சரியுனக்கு நரிவேசம்!
தோட்டாவைப் பாயவிட்டுக் கூடவே விஷமுமிட்டு
முட்டாளே நீவந்து மீதேனை எடுப்பாயோ
பாட்டன்நிலம் தொட்டுவிடப் பட்டாவா தந்திட்டோம்
எட்டிஉதை விட்டால் இமயத்தில் விழுந்திடுவாய்!
முப்போக மண்ணடா முக்கனியும் தருமடா
எப்போதும் வென்றிடும் தமிழன்தன் வீரமடா
இப்படையை வென்றிடவே எப்படையும் இங்கில்லை
இப்போது நெடுவாசல் முப்போதும் தமிழ்வாசல்!