அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, October 13, 2019

தொலைந்து போனவன்

பொருட்கள் புத்திசாலிகள்!
வைத்த இடத்தில் அவை
பாதுகாப்பாய் அமர்ந்துகொள்ளும்;
இருக்குமிடத்தில்
பதவிசாய் அமைந்துகொள்ளும்;
தேவைக்குமேல் இடத்தை
அடைத்துக் கொள்வதில்லை;

பொருட்கள் புத்திசாலிகள்
அவை தொலைந்துபோவதில்லை;
மனிதனைத் தொலைத்துவிட்டு
தேடிக் கொண்டிருப்பவை!