அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, October 23, 2019

தமிழில் பிறமொழிச் சொற்கள் வழங்கும் முறை

'வடசொல்லுள்ளும் பெயரல்லது செய்யுட்கு உரியவாய் வாரா' (சேனாவரையர்).

பொதுவாக, பெயர்ச் சொற்களையே ஒரு மொழி கடனாகப் பெறும். இதை மனதில் நிறுத்தி, பிறமொழிச் சொற்கள் தமிழில் வழங்கும் முறைகளைக் காண்போம்.

1  த், ஸ், ல் எனும் இடையெழுத்துகள்  'ற்' ஆகத் திரியும்
உத்சவம் - உற்சவம்
பஸ்பம் - பற்பம்
கல்பம் - கற்பம்

2 'ட' வில் தொடங்கும் பிறமொழி முதற் சொற்கள் 'த' என முதற்சொல்லாகத் திரியும்
டமருகம் - தமருகம்
டொப்பி - தொப்பி

 3 'ட' எனும் முதல் எழுத்து  'இ' முன்னெழுத்தைப் பெறுவதும் ஆம்.
டம்பம் - இடம்பம்

4 ஆகார ஈறு ஐகாரமாகும்
பிக்ஷா - பிச்சை

 5 ர, ல முன்னெழுத்துக்கு முன் 'இ' துணை முன்னெழுத்து சேரும்
ராமன் - இராமன்
லாபம் - இலாபம்