அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, October 13, 2019

மிச்சம்

தேநீர் பருகுதல்
ஒன்றும் பெரிதில்லை
காலையில்...
மாலையில்...
மனம் மகிழ...
கிண்ணத்தை முழுதாக்கி
எண்ணம்போல் பருகியிருக்கிறேன்.

தேநீர் பருகுவது
ஒன்றும் பெரிதில்லை
ஆனால்,
என்றாவது ஒருநாள்
அதன்
கடைசி சொட்டுவரை
பருகியுள்ளேனா?

இன்றும் என்
அருமைத் தேனீர் என்முன்!
பருகிக் களித்துக்
கவிழ்த்துப் பார்க்கிறேன்
கிண்ணத்தில் ஏதோ
இன்னமும் மிச்சமுள்ளது
எதுவென்றுதான்
எனக்குப் புரியவில்லை?