வீரர்:
என்நாடு என்றுரைத்தல்
இறுமாப்புக் குரலாகும்
எம்நாடு என்றிருத்தல்
இறும்பூதும் செயலாகும்
நம்நாடு என்றோதல்
நறும்பூவாய் மணம் வீசும்
நமக்கெதிர் எவரென்று
நம்நாடு காததிருப்போம்!
மக்கள்:
கண்துஞ்சாப் படைவீரர்
கடுங்குளிரில் காத்திருக்க
மண்மீது குடியெல்லாம்
மனமொப்பி வாழ்ந்திருக்க
பட்டாளக் குடிலிலே
பனிமூடிப் போனதென்று
கேட்டறிந்த சேதியினால்
கேடுற்றுப் போனோமே!
நாடு:
போனவர் போகவில்லை
பனிமலையில் மாளவில்லை
வானவர்போல் எமது
மனத்துள்ளே வாழ்கின்றார்!
தீரர் அவர் வீரம்
தந்தாரெம் குழந்தைக்கும்
பாரதம் காத்த அவர்
பல்லாண்டு வாழியவே!
: : 6-2-2017 அன்று
இமய பனிச்சரிவில்
வீரமரணம் அடைந்த
எமதருமை இருபது
வீரர்களுக்கு அஞ்சலி.