அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, February 24, 2017

இருபான் இமயம்

வீரர்:
என்நாடு என்றுரைத்தல்
     இறுமாப்புக் குரலாகும்
எம்நாடு என்றிருத்தல்
     இறும்பூதும் செயலாகும்
நம்நாடு என்றோதல்
     நறும்பூவாய் மணம் வீசும்
நமக்கெதிர் எவரென்று
     நம்நாடு காததிருப்போம்!

மக்கள்:
கண்துஞ்சாப் படைவீரர்
     கடுங்குளிரில் காத்திருக்க
மண்மீது குடியெல்லாம்
     மனமொப்பி வாழ்ந்திருக்க
பட்டாளக் குடிலிலே
     பனிமூடிப் போனதென்று
கேட்டறிந்த சேதியினால்
     கேடுற்றுப் போனோமே!

நாடு:
போனவர் போகவில்லை
     பனிமலையில் மாளவில்லை
வானவர்போல் எமது
     மனத்துள்ளே வாழ்கின்றார்!
தீரர் அவர் வீரம்
     தந்தாரெம் குழந்தைக்கும்
பாரதம் காத்த அவர்
     பல்லாண்டு வாழியவே!

: : 6-2-2017 அன்று
இமய பனிச்சரிவில்
வீரமரணம் அடைந்த
எமதருமை இருபது
வீரர்களுக்கு அஞ்சலி.