அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, February 23, 2017

அவன் இவனல்லன்

இவன்!
பொருள் கடந்தால் இழப்பு வரும்;;
மனம் கடந்தால் துக்கம் வரும்;
உடல் கடந்தால் படுக்கை வரும்;
உயிர் கடந்தால் இறப்பு வரும்!
இங்கே!
எத்தனுக்கும் காலம் வரும்;
எளியனுக்கு மோசம் வரும்;
சுழன்றுவரும் உலக மெல்லாம்
சூழ்ச்சிதானே மிகுந்து வரும்!

இவன்வேறு!
பொருள் கடந்தால் எளிமை வரும்;
மனம் கடந்தால் ஞானம் வரும்;
உடல் கடந்தால் அமைதி வரும்;
உயிர் கடந்தால் இருப்பு வரும்!
அங்கே,
புத்தனுக்கும் மெய்ம்மை தந்த
போதிமரம் நெருங்கி வரும்;
வித்தினிலே ஊறி நின்ற
உண்மையெல்லாம் தானே வரும்!