அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, August 9, 2019

வட்டம் மறந்த சப்பாத்திகள்

அம்மா சுட்ட
வட்டம் மறந்த சப்பாத்திகள்
தட்டில் விழும்போது
மறந்துபோன ஞாபகமூட்டல்
மனதை அறுக்கின்றது!
 'கைவலிக்குத் தைலம்
 வாங்கித் தா மகனே!'