அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, August 9, 2019

ஒய்யாரமா ஒரு தந்தி வேலை

அப்பாவிடமிருந்து கடிதம் :

பெரிய ஊருல வேலை
ஒடம்ப பாத்துக்க மவனே!
வரணுமுன்னு விருப்பம்தான்
ஒனக்கு ஏன் வீண்செலவு;
வீராவரம் போயி
தந்தி ஆபீசு பாத்தேன்
எம் மகன் ஒன்னைப்போல
ஒசந்த சேரில ஒரு தம்பி
ஒய்யாரமா அடிச்ச தந்தி வேல
அதுதான நீயின்னு
மனம் நெறஞ்சு போச்சி! ...

நாமம் போட்ட ஒருத்தன்தான்
ரொம்பவே நச்சரிச்சான்
இல்லைன்னா கொஞ்ச நேரம்
கூடுதலா இருந்திருப்பேன்.
அப்புறமா அவனும்கூட
தந்தி அடிக்கிற பையனிடம்
பணிவாப் பேசுனதுல
மனம் குளுந்து போச்சு எம் மவனே;
அவனவிட ஒசத்தியாமே வேலயில நீ!

மாடசாமி எஞ்சாமி
எம்மவன ஒசத்திப்புட்டான்!