அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Friday, April 14, 2017

வெயில்


வெயில் காற்றைப்போல் இல்லை
எதையும் அசைக்கவில்லை;
வெயில் கடலைப்போல் இல்லை
எங்கும் அசைவில்லை;
வெயில் மழையைப்போல் இல்லை
எங்கும் இரைச்சலில்லை;
வெயில் நிழலைப்போல் இல்லை
எதையும் மறைக்கவில்லை.

அமைதியைப் பேணும் உரு
வெண்மையைப் போற்றும் உரு
ஏற்றத்தாழ்வு இல்லாது
எங்கணும் பரவும் உரு
வெயில், அதனால்:
கடுமையாய் அடித்ததெனக்
குளத்துநீர் குடித்ததென
மண்ணும் சுட்டதென
மரமும் பட்டதென
வாழ்வு இற்றதென
வளமும் அற்றதெனத்
தொட்டதெலாம் குற்றமெனத்
திட்டாதீர் மானுடரே!