அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Wednesday, April 12, 2017

ஒற்றைப் பருக்கை

தத்தித் தவழும் குழந்தையின் வாயில்
அழகை உதிர்த்தது;
துடைத்து நின்ற அன்னையின் கையில்
அமுதம் ஆனது!
அழகு மங்கையின் இதழோரத்தில்
காதல் ஆனது;
துடைத்த போதில் அவனின் மனதில்
போதையானது!
பந்தியில் மேய்ந்த தொந்தியின் வாயில்
அருவருப்பானது;
துடைத்து நின்ற கையில்  வழிந்து
எச்சில் ஆனது!
தளர்ந்து நின்ற தாத்தனின் வாயில்
நோயும் ஆனது;
துடைத்து நின்ற பாட்டியின் கையில்
பரிவும் ஆனது!
சோறு எனும் ஈரெழுத்து
ஒற்றையானது;
பலபலவாய்க் குணம் காட்டும்
பருக்கையானது.