அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, November 7, 2019

மரம் இல்லாது மழையேது

ஒற்றை மார்போடு
மலைமேலேறிய கண்ணகி
மரத்தடியில் நிற்பதாகத் தன்
கணவனுக்குத் தூதுவிட,

கோவலனின் புட்பக விமானம்
கண்ணகியைத் தேடி
சுற்றிச்சுற்றி அலைந்தது
எந்த மரமென்று தேடியல்ல;
மலையில் ஏது மரம்
என்ற வாதையில்.

கணவன் வாரானென்று
சலித்துப் போய்
மொட்டைப் பாறையில்
குதித்து உயிர்விட்ட
கண்ணகியைக்
கண்டு வருந்திய மேகம்
இப்போதெல்லாம்
நீராய்ச் சொரிவதில்லை
மழையாய்ப் பெய்வதில்லை
அங்கங்கே
காறித் துப்பிவிட்டுக்
கடந்து செல்கிறது.