அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Monday, October 16, 2017

வெம்மை பூசிய வெயில்

பாகைமானியும்
வெப்பமானியும்
நூறு தாண்டிய பகல்

உண்டு கழித்து உறக்கம் கொண்டவர்
அனலைப் பழித்தனர்

வெயிலை அள்ளிப்பூசி
வியர்வையில் குளித்து
ஊண் மறந்த விவசாயி
மௌனம் பேசினான்!