அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Sunday, October 13, 2019

பழைய மாணவன்

நான் உங்கள்
பழைய மாணவன்
நினைவிருக்கிறதா ஐயா?

இல்லையே, தம்பி!

உங்களது ஆசியால்
இன்று நான்
இந்நகரின் ஆணையர்.

நல்லது! உன் மனதுக்கு
உன்னைச் சிறப்பாக
அறிமுகப்படுத்திக் கொண்டாய்;
அது சரி!
உன் மனதுக்கு
என்னை எவ்வாறு
அறிமுகம் செய்துள்ளாய்?
அதைச் சொல்லு ...




Saturday, September 7, 2019

சந்திரயான் 2


அறையும் பொறையும் ஓர்ந்தொ துக்கி
மறையா வொளிகண் டுணர்ந்தே கிடவே
வீயாத் திருவின் விறல்கெழு ஓடம்
மாயாப் புகழின் சந்திர யானை
எண்நாள் திங்கள் அணைய ஏகினை!
பெண்ணாள் காமுறு தலைவன் கண்டு
வாயுறு முத்தம் வேண்டி நெருங்க
தாமுறு நாணந் தலையிஅம் மடவாள்
தடமில் போய தெங்ஙன மெனவே
வடவரை வெற்பன் சோர்ந்த னனோ?
விறலன் றிதுவென வீணர் சொல்லோ?
மறவன் நீயென் றுணர்ந் திடுக!
நாவலஞ் சாருயர் சிவனே
பாவலஞ் சூழிசை பாடினேம் அம்ம!