அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு - குறள் 503

Thursday, March 1, 2018

குடைவரைக் கோயில்கள்

1. தமிழகத்தின் முதல் குடைவரைக் கோயில் - இலட்சித கோயில், மண்டகப்பட்டு, விழுப்புரம்.  மகேந்திரவர்ம பல்லவன் (கிபி.580-630) கட்டுவித்தது.
(பாண்டி நாட்டில் பிள்ளையார்பட்டி குறித்த மூலத் தகவல் இன்னமும் ஆராய்ச்சியில்)

2. பாண்டியர்களில் முதல் குடைவரைக் கோயில் திருநெல்வேலி, மலையடிக் குறிச்சி. கட்டுவித்தது பாண்டியன் மாறன் சடையன் ii (கிபி.750)

3. 'ஐ' என்ற எழுத்து வடிவம் முதலில் காணப்பெற்ற இடம் செஞ்சி, திருநாதர் குன்று.

4. குடைவரைக்  கோயில் எதுவும் 'பாடல்பெற்ற தலம்' இல்லை

5. இந்தியாவில் முதல் குடைவரைக் கோயில்கள் கட்டப்பெற்ற இடங்கள், பராபர், நாகர்ஜுனி (பாட்னா-கயாவுக்கு இடையேயுள்ள குன்றுகள்) - கடினபாறைகளில் கட்டுவித்தவர் அசோகர் (கிமு.273-232).
தமிழ்நாட்டிலும் அனைத்தும் கடினபாறைக் குன்றுகளே.
மேற்குக்கரையில் சாளுக்கியர்கள் (வாதாபி,  எல்லோரா) மணல்பாறைகளே.

(எனது கீச்சுப் பதிவு)

Wednesday, February 21, 2018

கழுகுமலை - சமணர் படுக்கை

வியப்பூட்டும் #கழுகுமலை #சமணர்படுக்கை:

பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையன் (கிபி.765-790) காலத்தில் திகம்பர சமணர்களால் செதுக்கப்பெற்ற சிற்பங்கள்!
150 தீர்த்தங்கரர்களின் அழகு அணிவகுப்பு; கீழே தமிழ் வட்டெழுத்து. தாய், தந்தை, மகள் என குடும்பத்தோடு இணைந்த குழுச்சிற்பமும் உண்டு.

#கழுகுமலை #வெட்டுவான்கோயில் :
கி.பி8ஆம் நூற்றாண்டின் திராவிடக் கட்டிடக் கலைச் சிறப்பு, காணுந்தோறும் உவப்பு.
சிவன், திருமால், பிரம்மா என மும்மூர்த்திகளுக்கான கோயில்.யார் கண்பட்டதோ, பாதியில் நிற்கிறது, தமிழனுக்கோ இழப்பு.
விமானமும் கருவறையும் உள்ளே பிள்ளையாருமே தற்போது இருப்பு.

#கழுகுமலை தமிழ் #வட்டெழுத்துகள்
கழுகுமலைச் சமணத் தீர்த்தங்கரர்களின் சிற்பங்களின் கீழே விளக்கக் குறிப்பை எழுதிவைத்த முன்னறிவு.
இது தமிழ் வட்டெழுத்து. வடக்கே சோழரும் பல்லவரும் கிரந்தத்தில் எழுத, தெற்கே பாண்டியர் வட்டெழுத்தையே மிகப் பயன்படுத்தினராம்.
நானும் வாசிப்பேன் ஓர்நாள்! https://t.co/jwbFq7j1vB